Tuesday 22 March 2011

சோனியா ஜி ....மன்மோகன் ஜி .... 3 ஜி..... அடச்சீ ......


அரசியல் - இதற்கும் எனக்கும் ஒரு பந்தமும் கிடையாது என்று இன்று வரை நினைத்திருந்த எனக்கு ....
கொஞ்சமாய் புரிந்திருக்கிறது என் வாக்கின் இன்றியமையாமை ...
தேர்தல் தினம் விடுமுறை கிடைக்கும் ...அப்படியே நட்பு  வட்டாரங்களை சந்தித்து விட்டும் வரலாம் என நினைக்கும் நான் 
இன்று தமிழக ஆட்சியின் ஆளுமை யாராகபோகிரார்கள் என எதிர்பார்ப்பும் அக்கறையும் இருக்க காரணங்கள் ஆயிரம்........!
 அது என்னோடு போகட்டும் 


பந்தயத்தில் தனக்கு வேண்டிய நபர் முதலில் வரவேண்டும் என பணம் கட்டும் சுவாரசியத்தை விட 
இவரை வர விடமாட்டேன் என சூளுரைக்கும் நபரையும் எவ்வாறு அதை நடத்தப் போகிறார் என்ற சுவாரசியம் பெரிதே.. 

அந்த வகையில் நான் சொல்லபோவது சீமானை பற்றியே தான் 
அவர் நேற்று முளைத்த காளானா இல்லை 
ஒரு துளி நீருக்காக காத்திருந்து பொருத்தது போதும் என வெகுண்டெழுந்த பெரு மர  விதையா ...
-இந்த தேர்தலில் நான் காங்கிரசை விடப்போவதில்லை அவர்களை வேரோடு அழிப்பது  தான் என் நோக்கம்
என் தமிழ் மக்களை அழிக்க துணை புரிந்த காங்கிரசார்கள் நம் தமிழ் நாட்டில் தலையெடுக்க கூடாது என 
சினம் கொண்டு பேசியிருக்கிறார் .....
காங்கிரசை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுங்கள் என கேட்கிறார் 
இதற்க்கேன்றே அவரது இயக்கத்தை கட்சியாகவும்  மாற்றியுள்ளார் 


இந்தியன் என்ற உணர்வை விட நான் தமிழன் எனும் கர்வம் தமிழனுக்கு இருக்கவே செய்கிறது அது மட்டுமில்லாமல் அப்பாவி தமிழர்களை கொன்று போட்ட 
அந்த கொடும் சிங்கள வெறியர்களை நினைத்தால் தமிழ் பால் குடித்த ஒவ்வொரு  தமிழனுக்கும் ரத்தம் சூடாகும் என்பதில் ஐயமில்லை  
ஆனால் சாமான்ய மனிதனால் முடியாது என்ற நிலையிலிருக்கிறோம் அக்கணம் வீருகொண்டவர் சீமான் என்பதில் நமக்கு பெருமையே .........


 தமிழுக்கு ,தமிழ் மக்களுக்கு,திராவிடனுக்கு நான் அடிமை என்ற கலைஞரின் தமிழார்வத்துக்கு ,பேச்சுக்கு நானும் அடிமையே 
ஆனால் ஒரு தமிழனுக்காக (பெருந்தலைவர் காமராஜர்) இந்திரா காந்தியையே மிரட்டிய பெருந்தமிழாசான்  தன் சுய விருப்பு வெறுப்புக்காக தமிழினங்களை 
பலிகொடுத்த பின் ......அவர் மீதுள்ள பற்று பறந்தது 

பல அரசியல் சூழ்ச்சி  , பழிக்குப்பழி ,பேராசை போன்ற காரணங்கள் இந்த நிகழ்வுக்குப்பின் இருக்க 
அந்த கொடூரம் புரையோடிய புண்ணாகவே இருக்கிறது ....

புண்ணுக்கு மேல் மருந்தாய் சீமானின் பேச்சு இளைஞர்களை ஈர்த்தது பெரும் பட்டாளத்தை (இளைஞர்கள்) தனது அஸ்திரமாக கொண்டுள்ள இவர் 
வைகோ ,திருமா இவர்களுக்கு பிறகு தீப்பறக்கும் பேச்சை அடையாளமாய் கொண்டுள்ளார் ஹிட்லரின் சாயலை இவர் பேச்சிலே காண்கிறேன் 
ஏதாவது செய்து தமிழ் மலர்ச்சி கிடைத்தாக வேண்டும் என்ற தேடல் அவரது கண்களில் தெரிகிறது 
முயற்சி செய்தால் வல்லூரையும் வெறுங்கையால் வெட்டலாம் என்ற தன்னம்பிக்கை 
இப்படி பல எனை ஈர்க்கவே செய்கிறது. ஆனால் .....

பின்வரும் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றாலும் ......
விடையின் வினோதம் அறிய ஆவல் ......



  • இவர் எந்த வகையில் காலகாலமாய் சாதுர்யமாக ஆட்சி  செய்து வரும் கலைஞரையும்  அவரது தோழமை கட்சிகளையும் எதிர்க்க போகிறார் ?


  • விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போதும் இவ்வித எதிர்பார்ப்புகள் இருந்தன நான் தனிக்காட்டு ராஜா, இன்னொரு கருப்பு M.G.R ,கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறினார்  ஆனால் தற்போது அவர் எல்லா அரசியல்வாதிகள் போல கூட்டணி என்று சகிதம் ஆகியுள்ளார் இவரும் அவரை போலே போக மாட்டார் என என்ன நிச்சயம் ?


  • இவர் ஒருவர் மட்டும் தமிழனத்தை , தமிழீழத்தை எவ்வாறு மீட்டுவிட முடியும் ......?


  • தமிழீழ விடுதலை என்ற சில நோக்கங்களே இவரது எதிர்கால அரசியலுக்கு போதுமா ......?

                                       .....ஜெயங்கொண்டான் வருவான் 

Thursday 10 March 2011

நான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ

னக்கு ஹாலிவுட்  படம்னா  உயிர் எல்லா ஹாலிவுட் ஆக்டர் ஆக்ட்ரஸ்  யும் தெரியும் அதுக்குன்னே காலேஜ்ல ஒரு தனி சூட் கேஸ் ல சி டி  சேத்து வெச்சேன் ..
எனக்கு இந்தியன் ஆக்டர் லாம் பிடிக்கவே பிடிக்காது உவ்வே .....டிராமா போட்டாலும் டான்சு ஆடுனாலும் ஹாலிவுட் ஸ்டெயிலு தான் ...எப்போவும்  ஹாலிவுட் சாங்க்ஸ் தான் என் காதுல முனுமுனுத்துட்டே  இருக்கும், 

எப்போ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆனாலும் பத்து பேர கூப்டு போய்டுவேன் , 
அகில இந்திய ஹாலிவுட் ரசிகர் மன்றத்துக்கு நான் தான் துணை செயலாளர் ,இதுக்குன்னே ஒரு நாளைக்கு தவுசட்ன் ருபீஸ் செலவு பண்ணுவேன் .......இப்பிடில்லாம்   பில்டப்பு குடுக்கனும்னு நெனச்சாலே செலவு பண்ணி சூனியம் வேப்பீங்கனு தெரியும் ....!




காலேஜ் படிக்கும்போது ரூம் ல desperado படம் பாத்தேன் எப்பா என்ன லுக்கு என்ன ஸ்டைலு அவர்தாங்க நான் ரசிச்ச முதல் ஹாலிவுட் ஹீரோ ,,,ஆண்டனியோ பண்டராஸ் ...இப்போவும் பேவரிட்  படம் வரிசையில desperado வும் இருக்கு 

அந்த படத்துல கிடாரிஸ்ட் ஆ வருவாரு ஒபெநிங் சீன்ல கிடார் வாசிச்சுக்கிட்டே ஒருத்தன அடிப்பார் 
அந்த கிடார் ல இருக்க ரத்தத்த தொடைச்சிட்டு மறுபடியும் வாசிப்பார் அந்த சீன்ல மயங்கினவன் தான் டாக்டர் நானு .......இப்போ  அவர பத்தி சொல்லணுமுன்னா ....


வர் நடிக்க வரலேன்னா இன்னொரு ரொனால்டோ வா ஆகிருப்பார் ஆமாங்க செமையான புட் பால் பிளேயர் 14  வயசுல கால்ல அடிபட்டு முறிஞ்சி அவர் கனவு கலைஞ்சிடுச்சி   அப்புறமா சினிமா பக்கம் வந்தாப்ல .... 

அவரு அப்பா போலீஸ் . இவர் 1960 இல் ஆகத்து பத்தாம் தேதி ஸ்பெயின் நாட்டிலே பிறந்தார் 

 சின்ன சின்ன வேஷத்துல நாடகத்துல நடிச்சு  அப்புறமா படிப்படியா தியேட்டர்,தெரு நாடகங்கள்ல  நடிச்சிகிட்டு இருந்தார் தெறம இருக்கவனுக்கு விளம்பரம் தேவையில்ல ....அந்த மாறி இவரு முகபாவனை,நடிப்பை பாத்து இவர ஸ்பெயின் லையே நடிக்க அழைப்பு வந்தது முதல் படம் “Laberinto de Pasiones” (“Labyrinth of Passion”) (1982) 

னக்குன்னு ஒரு தனி பாணிய வெச்சிருந்தார் நம்ம பண்டராஸ்  
நம்ம ஊருல கெளதம் மேனன் சூர்யா மாறி அங்கயும் இவர தேத்தி விட ஒரு ஆளு 
அவரு பேரு அல்மொடவர் , காதல் காமடி அப்டின்னு வரைட்டி காட்டி மத்த  நடிகர் காதுல புக போக வெச்சவரு  அல்மொடவர்  கூட கொஞ்சம் படம் பண்ணிட்டுருந்தப்பவே அமெரிக்கா ல ஹாலிவுட் ல நடிக்க சான்சு கிடைச்சது அதிலிருந்து ஏறுமுகம் தான் இவருக்கு ஆனா பிரச்சின என்னானா இவருக்கு இங்கிலீஷு சுத்தமா வராது .....ரூம் போட்டு யோசிச்சி 
ஒலி வடிவுல இங்கிலீஷ மனப்பாடம் பண்ண சொன்னாங்க  
அதையும் பண்ணி வெற்றிகரமா மடோனா கிட்டயே பாராட்ட வாங்கினார் ...

(1992) ல The "Mambo Kings"
"Vampire Chronicles” (1994).
"Desperado” (1995).
The Mask of Zorro” (1998)
“Crazy in Alabama” in 1999
"The Legend of Zorro” (2005),
"Assassins" (1995)



இதெல்லாம் அவுரோட பெரிய வெற்றிப்படங்கள் 

3 தடவ கோல்டன் க்ளோப் அவார்டு ,
5 தடவ அல்மா அவார்டு(காதல் மன்னன் மாறி )  ,  
அப்புறமா ஆப்பிள் சிங்கம் அவார்டு எல்லாம் தங்கதுலையே வாங்கிருக்கார் 
இந்த மாறி 50 கும் மேல குவிச்சிருக்கார் நம்ம தல  


வர்கிட என்ன ஸ்பெஷல் தெரியுமா புள்ளைங்க பாத்தா அப்டியே சொக்கி விழற அளவுக்கு வசீகரம் ,பார்வையில வீரம் ,குறிப்பா கடின உழைப்பு எந்த வேலைய செஞ்சாலும் (ரோல்) கத்துகிட்டு தான் செய்வார் "மாஸ்க் ஆப் தி ஜார்ரோ" ல நிஜமான இரும்பு  கத்திய வெச்சி சொலட்டுவார் ........
இவர்கிட்ட நான் பாத்தது கெத்து ....செம மேன்லி 

இவர்  நம்ம  ஊரு  பக்கம்  வந்தா நல்லா வருவார் ஆனா அந்த ஊர் பேரு வெச்சி படம் எடுக்குறவர் கிட்ட கொஞ்சம் கஷ்டம் தான் உடனே ஸ்பெயின் அப்டின்னு டைட்டில வெச்சி இவர வெல்டிங் அடிக்க வுட்ருவாறு  ,அப்புறம் நான் சொல்லி அடிக்கறதுல மாம்போ , கத்தி  எடுத்தா ஜார்ரோ..... ,கிடார் வாசிச்சா தேச்பெரடோ..... நு 250 பக்கத்துக்கு சொன்ன டயலாகையே  திரும்ப மனப்பாடம் பண்ணு நு சொல்லுவார் 

அப்புறம் என் பேரு ஆண்டனி நு பத்து தடவ திரும்ப சொல்லி கழுத்து வலிக்கு ரெண்டு  லிட்டர் மன்னன்னைய வாங்கி உருவியும் விடுவார் ......ஜாக்ரத ......  




            ஜெயங்கொண்டான் வருவான்  ......

Saturday 19 February 2011

நல்லா வருவாப்ல .....



தல எப்போதும் தல தான் அவர் மாறி ஒரு படைப்பாளிய நான், இந்த உலகம் 
பாத்திருக்காது அவர் ஒரு உலக நாயகன் இப்டி etc etc எல்லாருக்கும் தெரிஞ்ச கத   தான் 


நான் பாத்த கமல் வேற ,

6 வது படிக்கறப்போ சனி நாயிறு படம் போடறப்போ எல்லாம் எங்க வீட்ல தான் 
டி வீ  பாக்க வருவாங்க ஏன்னா அந்த கிராமத்துல எங்க வீட்ல தான் வாங்கினாங்க அப்போ வாழ்வே மாயம் பாத்தப்போ அவர் நடிப்புல அசந்தேன் 
என்னவோ நானே நடிச்ச மாறி இருமி அழுது  பில்டப்பு குடுப்பேன் 


முதல் காரணம் எங்க அண்ணன் தான் அப்டியே கமல் மாறியே இருப்பார் 
வீட்ல கூட கமல் மாறியே நடிச்சு பாப்பேன் கண்ணாடி முன்னாடி நின்னு
என்ன கொடும


அப்புறம் படிப்படியா முழுசா கமல் ரசிகனாவே ஆகிட்டேன் 12 வது 
ல ஆளவந்தான் ரிலீசு பசங்க எல்லாம் படத்துக்கு கூட்டிட்டு போக சொளிடானுங்க கை ல கால் காசு இல்ல 
அப்போ புக் குடுத்தாங்க புதுசா அப்டியே வந்த விலைக்கு வித்து 
என் கேர்ள் பிரெண்ட் கிட்ட கொஞ்சம் வாங்கி அப்டி இப்டி தேத்தி 
கூப்டு போயி பாத்தா ........மனிஷா வந்து குனிஞ்சா நம்ம பய ஒருத்தன் எட்டி பாத்தான் .......பக்கதுல ஒருத்தன் டேய் எப்டி பாத்தாலு அவ்ளோ தான் தெரியும் மூடிட்டு சேர் ல உக்காருன்னான் .....
(ஹி ஹி அந்த நம்ம பய நான் தான் )

இண்டர்வெல்ல ஐஸ் கிரீம் வேற அழுதேன் ......

படம் முடிஞ்சி நல்ல இருந்திச்சா நு கேட்டேன் 
ம்ம்ம்ம்  ஐஸ் கிரீம்  சூப்பர் நு வாய தொடச்சாணுக வக்கனையா 



அப்புறம் பஞ்ச தந்திரம் கு ஜெயம்கொண்டம்  தியேட்டர் ல நான் மட்டும் தான் சிரிச்சேன்(எவனுக்கும் புரில ) .....எல்லாம் என ஒரு மாறி பாதானுங்க 
அது வேற நம்ம ஊராச்சா.... வீட்ல போட்டு குடுப்பாணுக  நு சிரிப்பு வந்தாலும் 
அடக்கிகிட்டேன் கிரகம் 

பம்மல் கே சம்பந்தம் படத்த பஸ் ல தான் பாத்தேன் திடீர்னு ஒருத்தர் பக்கதுல வந்து தம்பி அங்கதான் படம் ஓடுதில்ல அப்புறம் ஏன் நீயும் படம் ஓட்டுற நு
சொல்லி ஆப் பண்ணிட்டாரு... சத்தமா சிரிச்சது தப்பா பாவி உலகம் (நேரம் இரவு : 2 மணி )

அப்புறம் விருமாண்டி இபோ நெனச்சா கூட புல்லரிக்குது அதுல முழு கமல பாத்தேன் அந்த மாறி கிறதா மீச வைக்கணும் நு ஆச 
உடனே வெச்சிகிட்டேன் பென்சில்ல (ஆத்தி எல்லாம் தெரியும் நா எனக்கு இபோ அரிக்குது எங்கனு சொலு பாப்பும் )





அன்பே சிவம் சீரியசா பாதிடுருக்கேன்
 பக்கதுல என் மச்சான் கிட்ட கேட்டேன்  பார்ரா எப்டி இருக்கு இந்த குடை பைட்டு நு 
மச்சி தூங்கும் பொது டிச்டுர்ப் பண்ணாத நு சொல்லி கொட்டாவி விட்டான் 
அப்டியே வாயில கொல்லிகட்டய சொருகலாம் நு தோணிச்சி 


வசூல் ராஜா பாத்தப்போ கட்டிபுடி வைத்தியத்துக்கு பக்கத்துக்கு  சீட் புள்ளைய கூப்டேன் வெயிட் எ நிமிட் பார் பைவ் மினிட் நு சொல்லி ஆள கூட்டி வந்துச்சு 
தியேட்டர் ல நெஞ்சால யே நகர்ந்தேன் 

ஹாஸ்டல் ல கமல் ரசிகர் மன்ற தலிவர் போஸ்ட நான் தான் ஜெயிச்சேன் 
போட்டி போட்டது நான் மட்டும் தான் .....

அப்புறமா தசாவதாரம் படம் பாத்து வந்து நல்ல இருக்கா நு கேட்டேன் அதுக்கு 
ம்ம்ம்ம் ம்ஹும் அப்டினுட்டு..... நான் யாரு!  .. ஹூ ஆம் ஐ !..நு சொன்னானுக  


இப்போ தான் விஜய் டி வீ   அது இதுன்னு விளம்பரம் லாம்

இபோதான்  கமல் யாருன்னே மக்களுக்கு தெரியிது 
அப்போல்லாம் கமல் ரசிகன்னு சொன்னாலே பச்சை மிளகா ஜுசு குடிசாப்ள 
நம்மள   லுக்கு விடுவானுக இபோ அவனே வந்து கமல் ஒரு ஜீனியஸ் நு சொல்வான் என்னமோ இவன் சொல்லி தான்
 ஆச்கர்ல அவார்டு குடுக்கற மாறி ..................




இபோதாங்க நம்ம காதல் மன்னன் பச்சை மண்ணு இன்னும் நிறைய இருக்கு அவர் கூட ட்ராவல்   பண்ண........
 என்கிட்ட டிக்கெட் இருக்கு உங்க கிட்ட...?

                                                      ......ஜெயங்கொண்டான் 



  

Tuesday 15 February 2011

ஜெயம்கொண்டம்


கல்லூரியில் கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் முடிஞ்சி viva கு மேடம் கேள்வி கேட்டாங்க உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல் நு 
அப்டி ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு இல்லையே நு நெனைச்சி 
க்ரைம் தன் மேடம் நு சொன்னேன் 


அப்டி என்ன க்ரைம் பண்ணுவாங்க -மேடம் 
கொலை ,கொள்ளை ,வழிப்பறி ,இப்டி எல்லாம் இருக்கு மேடம் கற்பழிப்பும் சேத்து-நான் 
ஓகே viva முடிஞ்சுது நீங்க போலாம் சீக்கிரம்.....
 அந்த viva ல நான் 2 வது மார்க் லாஸ்டுலேருந்து 


போய் சேந்த பஸ்டு நாள் P.D சார் வந்து யார்யாருக்கு என்ன விளையாட தெரியும் நு கேட்டார் 
எல்லாரும்  சொன்னாங்க நானும் சொன்னேன் கிரிக்கெட் ,கேரம் ,செஸ் ,டென்னிஸ் ,புட்பால் ,வாலிபால் ,ஹாக்கி நு 

உன்ன என்ன கேம்ஸ்  தெரியும் நு கேக்கல என்ன விளையாட தெரியும் நு கேட்டோம் -சார் 
இபோ சொன்ன எல்லாமே விளையாடுவேன் சார் -நான் 
நீ எந்த ஊர் -சார்
ஜெயம்கொண்டம் -நான் 

நீ அப்டி தான் இருப்பே உக்கார் நு சொல்லிட்டார் .....


ஒரு வாரத்துல சினிமாக்கு போனோம் நைட்டு லேட் ஆயிடுச்சி போலீஸ் காரன் கூபிட்டு எல்லா ஊரையும் கேட்டார் 
நான்    ஜெயம்கொண்டம் நு சொன்னதும் நீ மட்டும் வான்னு

என் அட்ரச கேட்டு நீ என்ன நக்சலைட்டா நு கேட்டு ஐ டி கார்ட புடுங்கிட்டார் 
அப்புறம் கால்ல விழுந்து வாங்கிட்டு வந்தோம் எல்லாரும் சேந்து 

இப்டி பல புகழ்களுக்கு சொந்தக்கார ஊர் தான் ஜெயம்கொண்டம்

எங்க ஊருக்கு இப்டி ஒரு ஆண்டி ஹீரோ ரோல் இருந்தாலும் 


பல சூப்பர் ஹீரோ ரோல் லாம் வெச்சிருக்கு எங்க ஊர் 
ஏற்கனவே இருக்கற வீட்ல குடி போறது ரொம்ப ஈசி 
நிலம் வாங்கி கஷ்டப்பட்டு நாமே செங்கல் செஞ்சி 
கட்டி குடிபோற சுகம் தனி 


அது போலதான் ரொம்ப பின் தங்கிய மாவட்டத்திலிருந்து 
(பாலைவனத்துல ஒரு நீரூற்றை போல )
ஒரு பெயர் சொல்ற அளவுக்கு வந்திருக்கு 


நிறைய படிச்சிருக்கற அதே போல பண்பாடும் மாறாத இளைஞர்கள் 
அதி காலையிலே கடமை செய்யும் குடும்ப விளக்குகள்
உள்ளதை கொடுத்து சந்தோஷப்படும் பணக்காரர்கள்  
இப்டி நிறைய .............
(கொஞ்சம் பக்கத்துல  கங்கை கொண்ட சோழபுரம் ,
அதிக நிலக்கரி இருக்கும் சிட்டி ,
தமிழ்நாட்லயே கரெக்டா தமிழ் பேசுற இடம் ) ..........


.........இதாங்க எங்க ஊரு(சோழர்களின் சொர்க்கம் ) .....
gangai gonda cholapuram temple